Dec 25, 2010

சொன்னாலும் சொன்னார்கள்

நாஞ்சில் சம்பத்: (தாணு ம.தி.மு.க-விலிருந்து விலகியதைப்பற்றி)
ஒரு யானையின் மீது ஒரு கொசு வந்து அமர்ந்ததாம். எதுவும் சொல்லாமல் நீண்ட நேரம் அமர்ந்திருந்த அந்த கொசு, போகும்போது சத்தமாக யானையிடம், ‘நான் போகிறேன் என சொல்லிவிட்டுப் பறக்க எத்தனிக்க...நீ எப்ப வந்த...என்கிட்ட போறேன்னு சொல்றியே..? என்று கொசுவிடம் சிரித்தபடி கேட்டதாம் யானை. இந்த கதையில் யானை –வைகோ!




ஆனந்தவிகடன் கட்டுரையில்:
‘இந்த கட்சியை(தி.மு.க) யாராலும் அழிக்க முடியாது. நம்மவர்களால் மட்டுமே முடியும் என்றார் அண்ணா!
நம்மவர்கள் என்று ‘அ சொன்னது ‘ஆ வைத்தானா?

மு.க.ஸ்டாலின்: 
‘என் இளமைக்கும் சுறுசுறுப்புக்கும் காரணம், நான் சாப்பிட உட்காரும்பொழுது பசியுடன் உட்காருவேன். எழுந்திருக்கும் பொழுதும் பசியுடன் எழுந்திருப்பேன்!

No comments:

Post a Comment