Dec 25, 2011

வெங்காயம்!

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!

* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்ஸ அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

Dec 5, 2011

ஏன் இந்த கொலை வெறி?

"why this கொலைவெறி" பாடல் மொழி கடந்து நாடு கடந்து வெறித்தனமாக ஹிட் ஆகிவிட்டது.   இதை தனுஷ் உட்பட அதை உருவாக்கிய டீமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.  பாலிவுட் பாடகர் சோனு நிகாமும் இந்த பாடலில் இம்ப்ரெஸ் ஆகி தன மகனை பாட வைத்திருக்கிறார்!   சுட்டி பாட்டு  இனிமை!  


***************************************************************************************
சில வாரங்களுக்கு முன்பு  பெய்த மழை தமிழகத்தை குறிப்பாக கடலோர மாவட்டங்களை உண்டு இல்லை என ஆக்கிவிட்டது.   விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்தாலும், ஆங்காங்கே பாதிப்புகளும் சற்றே அதிகம்.
ஏரிகள், கண்மாய்கள் நிரம்பி காண கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.  இப்படி கொட்டிய சென்ற வார மழை நாளில் நான் நன்றாக நனைந்து விட்டேன்.   பக்கத்தில் இருந்தவர் நனையவில்லை.  கையில் குடை இருந்ததது.  பிறகு என்ன குடை பிடிக்க வேண்டியது தானே என்கிறீர்களா?  பேருந்தில் குடை பிடித்தால் பக்கத்தில் இருப்பவருக்கு இடிக்காதா? அதனால் குடை பிடிக்கவில்லை.   சரி பேருந்து கட்டணங்களை எற்றிவிட்டார்களே இந்த ஓட்டை உடைசல் பேருந்துகளை கொஞ்சம் சரி பண்ணுங்கள் இல்லையேல் எடைக்கு போடுங்களேன்!

பேருந்து கட்டண  உயர்வு என்றவுடன் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது.
குறைவான கட்டணம் நீண்ட நாட்களாக வாங்கியதால் போக்குவரத்து துறைக்கு பேரிழப்பு என்று சொல்கிறார்களே,  இந்த தனியார் பேருந்துகளும் அதே கட்டணத்தை தானே இவ்வளவு நாட்களும் வாங்கிகொண்டிருந்தார்கள்!   
அவர்களும் நட்டத்தில்தான் வண்டி ஒட்டிக்கொண்டிருந்தார்களா?

                       கட்டணத்த ஏத்துங்க வேண்டாம்னு சொல்லல கொஞ்சமா ஏத்துங்க?