Dec 25, 2023

 


அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!

Jan 1, 2015

அன்பானவர்களுக்கு,  வணக்கம்! 
          உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி! இந்த வாழ்த்துக்கள் கடைசிவரை  குறைந்துவிடாமல் மேலும் அதிகரிக்கும்படி நடந்துகொள்வது எனது கடமை.  ஒவ்வொரு வருடம் துவங்கும்பொழுதும் இந்த வருடம் எந்த துன்ப நிகழ்வுகளும் நமக்கோ மற்றவர்களுக்கோ நடக்காமல் இருக்க பலவகைளில் இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.  ஆனால் அந்த வருட முடிவில் பார்த்தால் கடந்த வருடத்தை விட ஏகப்பட்ட துயர சம்பவங்கள் அந்தந்த வருடங்களில் நடந்துதான் வருகின்றன.  இயற்கை சீற்றம், விமான விபத்து, மருத்துவ சிகிச்சையில் மரணம், சாலை மரணம் கட்டிட விபத்து, தீவிரவாத தாக்குதல், பாலியல் வன்முறை, இதுமட்டுமில்லாமல் பலவகை பலமட்ட கொள்ளை, இயற்கை சுரண்டல்  இப்படி உலகில் உள்ள நம் அறிமுகமுள்ள, அறிமுகம் இல்லாத நண்பர்களுக்கு துன்பங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.  கடைசியில் இறைவன் தன் OA-விடம் FILE வாங்கிப்பார்த்து எல்லாம் ரூல்ஸ் படிதான்(விதிப்படி) நடத்தியிருக்கிறார் என்று சமாதனம் ஆகிறோம்(!?)
             ஒருவகையில் பார்த்தால் அதுவும் நம் மன வலிமையை கூட்டும் ஒரு மருத்துவ முறைதான்! நம் துன்பங்களை முழுவதையும் அவரிடம் சொல்லிவிட்டு சும்மா இருக்காமல், நம் வழக்கமான கொள்கையை மாற்றாமல்,  எத்தகைய துன்பம் நேரினும், நம் கடமையை நேர்மையுடனும், மகிழ்வுடனும் செய்து முடிப்போம், . சிறிதளவேனும் சமூக அக்கறை கொள்வோம்,  அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வோம்,  ஒவ்வொரு நாளும் புதிதாக பிறந்ததாக எண்ணி அந்த நாளை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து முடிக்க முயற்சிப்போம்.  எதிர்வும் துன்பங்களை தாங்கும் மனவலிமைபெற முயற்சிப்போம்.  
                  நம் அனைவருக்குமே, இந்த புத்தாண்டு 2015 இனிதாகவே அமைய வாழ்த்துக்கள்!  

                                            அன்புடன் மதி 

Mar 17, 2014

சில எளிய மருத்துவ குறிப்புகள்!

ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம் . . .

உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.

முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.

மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு
மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது.

ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம்.(படத்தில் மேலே காட்டப்பட்டுள்ளது) மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.

1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார்.

உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்

மரு நீங்க 

"மரு" (Skin Tag) உதிர... இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும். இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை... அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும். மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும். இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.


 மாரடைப்பை தவிர்க்க ..

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??
மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . 
அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.
அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,
ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.
இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..
பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..
இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..

சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் ரெசிபிகள்!

இன்றைய தலைமுறையினரைப் பாடாய்ப்படுத்திவரும் மிக முக்கிய நோய்களில் ஒன்று... சர்க்கரை நோய். இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, பலரும் பெருங்குழப்பத்துக்கு ஆளாவது உணவு பற்றித்தான்.
''இனிமே இனிப்பையே தொடக் கூடாதோ? அரிசி, உருளைக்கிழங்கு கிட்டக்கூட நெருங்கக் கூடாதாமே. வெறும் பாகற்காய்தான் சேர்த்துக்கணுமா?'' என்பது போன்று பல சந்தேகங்கள் மனதில் எழும்.
''சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம்.
உணவுப்பழக்கத்தின் மூலமே சர்க்கரை நோயைப் பெரும்பாலும் கட்டுப்படுத்திவிடலாம்'' என்று சென்னை எம்.வி.டயபடீஸ் சென்டரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணராகப் பணிபுரியும் ஷீலா பால் கூறுகிறார்.
''சர்க்கரை நோயாளிகள், மூன்று வேளை உணவை, ஆறு வேளையாக சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். எதையுமே அளவோடு கொஞ்சமாக சாப்பிட வேண்டும். சர்க்கரை, இனிப்பைத் தவிர உடலுக்கு வேறு எந்தப் பலனையும் தருவது இல்லை. இனிப்புகளை நிறைய சாப்பிடுவதால்தான், உடலில் சர்க்கரைச் சத்து சேர்ந்துவிடுகிறது. எனவே, தவிர்ப்பது முக்கியம்'' என்கிற ஷீலா பால், சர்க்கரை நோய்க்கான சில ஸ்பெஷல் ரெசிபிகளைச் சொல்ல, அவற்றைச் செய்து காட்டி அசத்தினார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்.
சத்துமாவு பாசிப்பருப்பு அடை
தேவையானவை: எல்லாத் தானியங்களும் சேர்த்து அரைத்த சத்து மாவு, பாசிப்பருப்பு - தலா அரை கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு, கொத்துமல்லித் தழை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன், சத்துமாவையும் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். அதில் வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, மிளகு, சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும். அடைக்குத் தொட்டுக்கொள்ள, காரச்சட்னி அருமையாக இருக்கும்.
கம்பு தயிர் சாதம்
தேவையானவை: கம்பு - ஒரு கப், தண்ணீர் - 5 கப், பால் - ஒன்றரை கப், தயிர் - ஒரு கரண்டி, தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, இஞ்சி - ஒரு துண்டு, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, உப்பு - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: கம்பை சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி வைக்கவும். சிறிது நேரம் கழித்து, மிக்ஸியில் போட்டு, 'விப்பர்’ பட்டன் கொண்டு, இரண்டு முறை அடித்து எடுத்துப் புடைத்து, தோலை நீக்கிக்கொள்ளவும். (கம்பை ஒரு தட்டில் பரத்தி ஊதினால், தோல் போய்விடும்). பிறகு, மீண்டும் மிக்ஸியில் போட்டு ரவைப் பதத்தில் உடைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும்.
உடைத்த கம்புடன் 5 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வைக்கவும். நாலைந்து விசில் வந்ததும் இறக்கி, பிரஷர் போனதும் திறந்து, பால் சேர்த்து நன்கு கிளறவும்.
பிறகு, கடாயைக் காயவைத்து, எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, பொன்னிறமானதும், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு, பச்சை மிளகாய், இஞ்சியை வதக்கி, கம்பு சாதத்தில் சேர்க்கவும். கடைசியாக, உப்பு, தயிர், தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாகக் கிளறிப் பரிமாறவும்.
மாங்காய் இஞ்சி நெல்லிக்காய்த் துவையல்
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 4, மாங்காய் இஞ்சி - 50 கிராம், கொத்துமல்லித் தழை - கைப்பிடி, பச்சை மிளகாய் - 2, புளி - சிறு அளவு, துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: மாங்காய் இஞ்சியைத் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கவும். நெல்லிக்காயையும் கொட்டை நீக்கி, நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் இஞ்சி, நெல்லிக்காயுடன் மற்ற பொருட்களையும் போட்டு ஐந்து நிமிடம் வதக்கி, ஆறவைத்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.
சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், பிரெட், தோசையின் மேலே தடவி சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு: இந்தத் துவையலை சாதத்தில் கலந்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, ஒரு துளி நெய்விட்டுக் கலந்தால், சுவையான 'மாங்காய் இஞ்சி - நெல்லிக்காய் சாதம்’ தயார்.
கலர்ஃபுல் குடமிளகாய் சாலட்
தேவையானவை: சிவப்பு, மஞ்சள், பச்சை குடமிளகாய்கள் - தலா பாதி அளவு, லெட்டூஸ் இலை - சிறிதளவு, தக்காளி - 1, ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன், வினிகர் (அல்லது) எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய புதினா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மூன்று நிற குடமிளகாய்களையும் நீளவாக்கில், மெல்லியதாக நறுக்கவும். தக்காளியையும் மெல்லிய நீள வில்லைகளாக நறுக்கவும். லெட்டூஸ் இலைகளைக் கிழித்துப் போடவும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் ஆலிவ் ஆயில், உப்பு, சர்க்கரை, வினிகர் (அல்லது) எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய புதினா சேர்த்து, நறுக்கி வைத்திருக்கும் காய்களை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.
குறிப்பு: நகரங்களில் உள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் 'ஓரிகானா’ என்னும் பதப்படுத்திய, வாசனை இலை கிடைக்கிறது. புதினாவுக்குப் பதிலாக இந்த இலை அரை டீஸ்பூன் சேர்க்கலாம். சாலட்டின் மணமும் சுவையும் இன்னும் தூக்கலாக இருக்கும்.
முளைகட்டிய பாசிப்பயறு சூப்
தேவையானவை: முளைகட்டிய பாசிப்பயறு - அரை கப், பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 4 பல், தனியாதூள் - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்துமல்லி, எண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தேங்காய்ப்பால் - ஒரு கரண்டி.
செய்முறை: வெங்காயம், பூண்டைத் தோலுரித்து பொடியாக நறுக்கவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதங்கியதும், புதினா, கொத்துமல்லி சேர்த்து வதக்கவும். 3 டம்ளர் தண்ணீரில், தனியாதூளைக் கரைத்து வடிகட்டி, வதக்கிய கலவையில் சேர்க்கவும். நன்றாகக் கொதிக்கும்போது, முளைகட்டிய பயறைச் சேர்த்து, வேகவிடவும். அரை வேக்காடு வெந்ததும் இறக்கி, தேவையான உப்பு சேர்த்து, தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்து பரிமாறவும். தனியா வாசத்துடன், வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த சூப்.
விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் மிளகுத்தூளை, கொதிக்கும்போது சேர்க்கலாம். சிறிது கெட்டியாக வேண்டும் என்பவர்கள், பாதி வெந்த நிலையில் இருக்கும் பயறை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, அரைத்து, சூப்பில் சேர்த்துக் கலக்கிக்கொள்ளலாம்.
நச்சுக்கொட்டைக் கீரை மிளகுப் பொரியல்
தேவையானவை: கழுவி நறுக்கிய நச்சுக்கொட்டைக் கீரை - 2 கப், பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 6 பல், வறுத்துப் பொடித்த மிளகுத்தூள், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.
செய்முறை: பூண்டு, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, சீரகம் தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி, கீரையைச் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து, மூடி வைக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
கீரை நன்கு வெந்ததும், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.
பொரியலில் மிளகு வாசம் மூக்கைத் துளைக்கும்.
குறிப்பு: நச்சுக்கொட்டைச் செடி எல்லா இடத்திலும் பரவலாக வளர்ந்து கிடக்கும். பொதுவாக யாரும் தேடாமல் கிடக்கும் இந்த இலைகள், அதிக சத்து நிரம்பியவை. அடிக்கடி செய்து சாப்பிடலாம். உடலுக்கும் நல்லது.



மேற்கண்ட தகவல்கள் Facebook நண்பர்கள் மூலமாக கிடைத்தவை நன்றி பதிவிட்டவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும்.;  

Feb 27, 2013

சுஜாதா- An upgraded version (writer)


என்னை போன்ற சாமானியர்களுக்கு புத்தகம் படிப்பதில் ஓர் இயல்பான ஆர்வத்தை ஏற்படுத்திய சுஜாதாவின் நினைவு தினம் இன்று! உன் இடத்தில் வேறொருவரை தேடுகிறேன். இன்றுவரை கிடைக்கவில்லை! 

Dec 24, 2012

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்துக்கள்!

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்துக்கள்!



Dec 13, 2012

ஒரு டிசம்பர் தினம்!



                    எம்.ஜி.ஆர் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.   மெரினா பார்க்கலாம்,  எம்.ஜி.ஆர் சமாதி பார்கலாம்  என்று எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து சுற்றுலா கிளம்பி வரும்,  எம்.ஜி.ஆரை இன்றும் தெய்வமாக நினைக்கும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும்.

                  ஆனால் "அங்கு இரட்டை இலை சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.  அரசின் செலவில் கட்சி சின்னம் அமைப்பது தவறு"  என்று தி.மு.காவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி என்பவர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க,   அரசின் சார்பில்,   "அது இரட்டை இலை சின்னம் இல்லை...... அது வெற்றியை குறிக்கும் சின்னம்!" என்றும், "பறக்கும் குதிரையின் இறகுகள்".  என்றும் வாதிட்டுள்ளார்கள்.

                  எனக்கு, எப்படி படுத்துக்கொண்டு  பார்த்தாலும் அப்படியெல்லாம் தெரியவில்லை!  உங்களுக்கு?


*******************************************************************************************************************

                எங்கள் பகுதியில் ஒரு குறிப்பிட்ட தினசரி பத்திரிக்கை  தவிர்த்து வேறு தின பத்திரிக்கைகள் வராததால், ஏதோ தினசரி செய்திகளை அறிந்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில் அதை வாங்கிக்கொண்டிருக்கிறேன்.  கடந்த வாரம் ஒருநாள் எங்கள் வீட்டுக்கு போடப்பட்டிருந்த பத்திரிக்கையுடன் ஒரு காலண்டரும் சேர்த்து போட்டிருந்தார்கள்.  அதில் விலை பற்றி குறிப்பிடாததால்  நான் இலவசம் என்று எண்ணியிருந்தேன்.  பிறகுதான் கவனித்தேன்.  அன்றைய பத்திரிக்கை  விலை ரூபாய் 12 என்று. (மற்ற நாட்களில் ரூ.4)   காலண்டர் விலை ரூ 8 என்று மறைமுகமாக நிர்னையித்திருந்தார்கள்.   

                      எனக்கு வருடந்தோறும் இலவசமாக நான்கைந்து காலண்டர்கள் கிடைப்பதால்,  அந்த ஏஜெண்டிடம் எனக்கு இந்த காலண்டர் வேண்டாம்,  பில் தொகையில் ரூ.8 கழித்துக்கொள்ளுங்கள் என்றேன்.   அதற்க்கு அவர் முடியாது சார், அது  அன்றைய பத்திரிக்கையின்  விலை.  சேர்த்து தான் வழங்கப்படும் என்றார்.     நான் ஏமாற்றப்படுகிறேன் என்பதை உணர்ந்து இந்த தின பத்திரிக்கையின் மதுரை  வினியோக அலுவலகத்திற்க்கு ஃபோன் செய்து.  "ஊரெல்லாம்  அநியாயம் நடப்பதாக  சுட்டிக்காட்டும் உங்கள் அநியாயத்தை எந்த பத்திரிக்கையில் பிரசுரிப்பது" என்று சற்றே, கோபமாக கேட்டபிறகு  அந்த காலண்டரை திரும்ப எடுத்துக்கொள்வதாக சொன்னார்கள்.   பின்னே,  இதை அவர்களிடம் கேட்காமல் டீ கடை  பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டா இருக்கமுடியும்? 
                      எனக்கு 8 ரூபாய் செலுத்தவேண்டும் என்ற கோபம் இல்லை,  "என் விருப்பம் இல்லாமல் என்னிடம் ஒரு பொருளை விற்பனை செய்யப்பட்டவிதம் "  என்னை கோபப்படுத்தியது!  

இந்த நிகழ்வை கேட்டால் கிடைக்கும் ask இல் பதிவிட்டதன்மூலம்  என் நிலைப்பாட்டிற்க்கு ஆதரவு வழங்கிய நண்பர்களுக்கும்,  கேபிள் சங்கர்  அவர்களுக்கும் நன்றி!  

                
********************************************************************************************************************      

             
                       
 ஒரு  யூ ட்யூப்   வீடியோ இந்த நிமிடம் வரை 164,003,004 ஹிட்ஸ்களை பெற்றிருக்கிறது.  இது யூ ட்யூப்  வரலாற்றில் அதிக பட்ச எண்ணிக்கையாகும்.     தென்கொரிய பாப் பாடகர் PSY ஆடிப்பாடி வெளியிட்ட இந்த வீடியோ   "கங்கணம் ஸ்டைல்"  என்று அழைக்கப்படுகிறது.   இந்த ஸ்டைல் நடனம் இன்று உலகம் முழுதும் பரபரவென்று பற்றி பரவி  வருகிறது.           

               எல்லோரும் கலாச்சாரத்தை ஒரு வழிபண்ண கங்கணம் கட்டிக்கிட்டுதான்  திரியுறாங்க!  
  
  
                      



*********************************************************************************************************************





                    நமது உறவுப்பினைப்புகளை  எந்த எல்லை வரை உங்களால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்!.   உங்கள் அத்தையின் தம்பியுடைய மாமனாரை எங்காவது ஒரு குடும்ப விழாவில்  சந்திக்கும் பொழுது என்ன உறவு சொல்லி அழைப்பது  என்பன போன்ற குழப்பங்கள் ஏற்ப்பட்டிருக்கிறதா?  கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும்!.   அதுமிட்டுமில்லாமல் நம் பெற்றோர்கள் நமக்கு அறிமுகப்பதத்திவைத்த உறவுகள் அனைவரையும் ஞாபகத்தில் கொள்ள நம்மால் இயலவில்லை.     நம் நிலைமை இப்படி இருக்கும்பொழுது,  நாம் நமது வாரிசுகளுக்கு அவர்களை எப்படி அறிமுகபடுத்த முடியும்?

                        இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இணையத்தில் தேடியபொழுது எனக்கு ஒரு அருமையான family tree -யை உருவாக்கக்கூடிய ஒரு இணையத்தளம் கிடைத்தது.

              அது   www.geni.com   பயன்படுத்த எளிதாகவும், உபயோகமாகவும் இருந்த்தது.    இதைவிட சிறந்ததாக வேறு இணையதளம் இருந்தால் எனக்கு சிபாரிசு செய்யவும்!
           
                " ஏன்னா உறவு அறுந்துடக்கூடாது பாருங்க!, அதான்!!"


*********************************************************************************************************************

நண்பர் விஜயகுமாருடன்  நாமக்கல்லில்  பின்னிரவு பேருந்தை கணக்கில் கொண்டு இரவுக்காட்சி  "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்"  படத்திற்க்கு எவ்வித எதிர்பார்புமின்றி சென்றேன்!   ஒரு வருடமாக காதலித்து,  மூன்று நாளில் திருமணத்திற்க்கு   தயாராகும் கதாநாயகன்  நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் பொழுது ஒரு விபத்து, அதன்மூலம்  கடந்த ஒருவருட ஞாபகமறதி(காதலித்த பெண்ணையும், தன் திருமணத்தையும் கூட மறந்து விட்டார்)  அதைத்தொடர்ந்து,   அவரின்  நண்பர்கள்  மாப்பிள்ளை வீட்டாருக்கும், பெண்ணுக்கும் தெரியாமல்,  சிகிச்சை,  திருமணம்  என்று கஷ்டப்படுகிறார்கள்!   நடிகர்கள் அனைவரும் சீரியசாக நடிக்க பார்க்கும் ரசிகர்களுக்கு  அவ்வளவும் காமெடி!    நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு முழுப்படத்தையும் ரசித்து சிரித்தேன்!   
நன்றி புதுமுக இயாக்குனர் பாலாஜி தரணீதரன்! 
 பீட்ஸா மாதிரி எளிமை & நன்று!

********************************************************************************************************************


ஒரு கொசு'றுத் தகவல்    

இன்று நமக்கெல்லாம் மெகா வில்லனாக அவதாரம் எடுத்திருக்கும்,  கொசுவுக்கு 47 பற்கள்,  மழைத்துளிகளிடையே நனையாமல் புகுந்து பறக்கக்கூடிய வல்லமை பெற்றவை!.  பறக்கும் பொழுது ஒரு வினாடிக்கு 300 முதல் 600 முறை சிறகடிக்கும்.  அதுதான் நாம் காதுக்கு கேட்கும் அந்த ரீங்காரம்!  பெண்கொசுக்கள் மட்டுமே கடிக்கக்கூடியவை

                                   பிறந்து ஒரு வாரமே வாழும் இவை  உலகம் முழுவதும் வருடத்திற்கு 10 லட்சம் மனிதர்களை கொன்று குவிக்கிறது! 

நான் கொசு!

*********************************************************************************************************************



கிறிஸ்து பிறப்பதற்க்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் வசித்த மாயன் என்ற ஒரு குறிப்பிட்ட நாகரீக வம்ஸத்தினர் எழுதிய காலண்டர் டிசம்பர் 21, 2012 வரை மட்டுமே உள்ளதாகவும், அதன் பிறகு அந்த காலண்டரில் விசயங்கள் இல்லாததால் டிசம்பர் 21 அன்று உலகம் அழிந்து விடும் என்று அறிவு ஜீவிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.

இதை ஏன் அப்படி நினைக்க வேண்டும், கீழ்க்கண்ட பிற காரணங்கள் இருக்கலாம் அல்லவா?

1. அந்த காலண்டரை செதுக்கிக்கொண்டிருக்கும் பொழுது, உழி உடைந்து போயிருக்கலாம்! அல்லது கூர்மலுங்கி இருக்கலாம்!, அதன் பிறகு வேறு வேலை இருந்து அதை கவனிக்க போயிருக்கலாம்!

2. அந்த வேலையை மெனக்கெட்டு செய்துகொண்டிருந்த நபர் கூலி கட்டுபடியாகாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு போயிருக்கலாம்!

3. இந்த நூற்றாண்டில் வாழும் நம்மை ஏப்ரல் ஃபூல் செய்ய முயற்சி செய்து, டிசம்பர் ஃபூல் செய்திருக்கலாம்!.

4. பாதி வேலை பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது, திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு, இந்த வேலையை பார்க்கிறதுக்கு, பேசாம டினோசருக்கு பேன் பார்க்க போகலாம் என்று நினைத்திருக்கலாம்!.

Nov 27, 2012

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம்


பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வாட்டி எடுக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு பல மருத்துவமுஊறைகளை கையாண்டு வருகின்றனர். இதில் சித்த மருத்துவர்கள் பரிந்துரைப்பது நிலவேம்பு கசாயம். இதற்கு பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளன. சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் நிலவேம்பு மூலிகையின் பங்கு அதிகம் உள்ளது. ஒரு சிறந்த கிருமி நாசினி இதனால் உடலில் நோய் எதிப்பு சக்தி அதிகம் உருவாகின்றது. 

நிலவேம்பு இந்தியாவின் அனைத்துப் பகுதியிலும் வளரும் ஒரு செடி

வகையாகும். இதில் சீமை நிலவேம்பு, சூரத்து நிலவேம்பு என இரு

வகைகள்  உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.

இதனை சிரட்குச்சிகாண்டகம்கிராதம்கிரியாத்துகிராகதி

நாட்டுநிலவேம்பு,  அனாரியத்தித்தம்காண்டம் கோகணம் என  

பல  பெயர்களில்அழைக்கின்றனர்.


Tamil - Nila Vembu

English - Creat

Sanskri - Bhunimba

Malayalam - Kiriyatta

Telugu - Nila vembu

Botanical Name - Andrographis paniculata 

இதன் இலை தண்டு, வேர், பூ, காய் (சமூலம்) அனைத்தும் மருத்துவப் பயன் 

கொண்டவை.


வாதசுரம் நீரேற்றம் மாற்றுஞ் சுரதோடே

காதமென ஓடக் கடியுங்காண் மாதரசே

பித்த மயக்கறுக்கும் பின்புதெளி வைக்கொடுக்கும்

சுத்த நில வேம்பின் தொழில்

(அகத்தியர் குணபாடம்)


குடல் பூச்சி நீங்க:
வயிற்று பூச்சிகள் உடலுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடலின் வலிமை குறைந்து நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றோம். வயிற்று பூச்சிகள் நீங்க நிலவேம்பு நீரை நீரில் கொதிக்கவைத்து காஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேரத்தில் அருந்தி வந்தால் வயிற்று பூச்சி நீங்கும்.

உடல் வலு பெற:

உடல் வலிமையின்றி மெலிந்துகாணப்படுபவர்கள் நிலவேம்பின் பூ மற்றும் காய்களை கசாயமாக செய்து சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு வலிமை அடையும்.

மயக்கம் தீர:
சிலருக்கு அடிக்கடி மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தொடர்ந்து நிலவேம்பு கஷாயத்தை அருந்தி வந்தால் சரியாகிவிடும்.

பசியை தூண்ட:
பசியால் அவதிப்படுபவர்களை காட்டிலும் பசியின்றி அவதிப்படுபவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுகள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகின்றது. இவர்கள் நிலவேம்பு பூ, மற்றும் காய் பகுதியை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதை காலையில் மட்டும் கஷாயம் செய்து குடித்துவந்தால் பசி நன்றாக ஏற்படும். அதே போன்று பித்தம் சார்ந்த வாந்தி, மயக்கம் போன்ற பல பிரச்னைகளுக்கு இந்த பாதிப்பில் இருந்து விடுபட இந்த கஷாயம் உதவுகிறது.

தலை வலி நீங்க:
அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை இரண்டு வேளையும் பருகி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறைந்து தும்மல் இருமல் போன்ற பாதிப்புகள் சரியாகும்.

குழந்தைகளுக்கு :
வயிற்று பொருமல் மற்றும் கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்பின் இலையை சாறெடுத்து கொதிக்கவைத்து ஆறவைத்து தினமும் 5 மிலி கொடுத்து வந்தால் வயிற்று பொருமல் சரியாகும்.



விஷ காய்ச்சல் குணமாக:
நிலவேம்பு 15 கிராம், கிக்சிலத் தோல் 5 கிராம், கொத்துமல்லி 5 கிராம், இவற்றை ஒன்றாக சேர்த்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து. அப்படியே மூடி ஒரு மணி நேரத் கழித்து வடிகட்டி பின்பு நான் ஒன்றுக்கு 30 மிலி என மூன்று வேளை குடித்து வந்தால் காய்ச்சல் சரியாகும்.

அஜீரணம் சரியாக:
நிலவேம்பு (பூ, காய்) காய்ந்தது 16 கிராம், வசம்புத்தூள் 4 கிராம், சதக்குப்பை விதைத்தூள் 4 கிராம், கோரைக்கிழங்கு தூள் 17 கிராம் இவற்றை ஒன்றாக சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு அதை 1 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி எடுத்து தினமும் அருந்தி வந்தால் உடல் வலு பெறும் மேலும் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.
தகவல் நன்றி: நக்கீரன், தினகரன் 

Nov 20, 2012

கருத்து சொல்லலாமா?

     கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி மெகா ஸ்டார்களை வைத்து எடுத்த சமீபத்திய படங்களான முகமூடி, தாண்டவம், மாற்றான் போன்றவை திரைக்கதையில் சொதப்பியதால் தியேட்டரை விட்டு நன்றாக ஓடுகிறது (தியேட்டரைவிட்டு) .    சூர்யா+கே.வி.ஆனந்த் கூட்டணி என்ற ஒரே காரணத்தினால் 'மாற்றான்' நன்றாக இருக்கும் என்று நம்பி குடும்பத்துடன் கடந்த சனிக்கிழமை  சென்றபொழுது தியேட்டரில் எங்களுடன் சேர்த்து மொத்தம் 13 பேர் இருந்தார்கள்.   ஆனால் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று  சமீபத்தில் பார்த்து ரசித்த படம் பீட்சா.  ஒரு டார்ச் லைட் வெளிச்சத்தை  வைத்து நல்லாதான் பயமுறுத்துராங்க!   நல்ல திரைக்கதை மற்றும் இயக்கம்.  கலைஞர் டி‌வி நாளைய இயக்குனரில் வெற்றிபெற்ற  கார்த்திக் சுப்பாராஜ் தன் திறமையை அகன்ற திரையிலும் நிரூபித்திருக்கிறார்.
                             
*********************************************************************************************************************
       
          இந்த தீபாவளிக்கு முன்பும்   பின்பும் தென்மாவட்டங்களில் நடந்த படுகொலைகள் அதை ஒட்டி நடந்த கலவரங்கள்,  கடையடைப்புகள், போக்குவரத்து நிறுத்தம் என்று ஒரே கலவர பூமியாக இருந்தது.    தீபாவளியை நிம்மதியாக கொண்டாட முடியாத சூழ்நிலை இப்பகுதிகளில் நிலவியது..   காவல் துறை உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டது இதன் உச்சம்!

                இப்பகுதிகளில் வருடந்தோறும் நிகழும் இம்மாதிரியான சம்பவங்களுக்கு அடிப்படை காரணத்தை அரசு அலசி ஆராய வேண்டும்.

                தொழில், வேலை வாய்ப்புகள்   இம்மாவட்டங்களில் வளர்ச்சியடையாததே   முதன்மை காரணம்.   சமீபத்தில்கூட  பல்வேறு தொழிற்சாலைகளுக்கு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்  கூட சென்னையை சுற்றியே பல்வேறு  தொழிற்சாலைகள் அமைய வாய்ப்பு வளங்கப்பட்டுள்ளன.   தென் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்கள்  தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.  

                                      தொழில்,  வேலை வாய்ப்புகள்  பெறுகியுள்ள நகரங்களில் இத்தகைய சாதியக்கலவரங்கள் ஏற்பட வாய்ப்பில்லாமல் சமூக ஒற்றுமை நிலவுகிறது.

                                  இனியாவது சென்னையை தாண்டி தென் மாவட்டங்களுக்கு ஒன்றிரண்டு தொழிற்சாலைகளை தள்ளிவிட்டால் மாநிலம் சமச்சீரான வளர்ச்சிகண்டு, சாதிய கலவரங்களும் ஒழிய வாய்ப்பு ஏற்ப்படும்.


இதெல்லாம் எனக்கே தோணுதே...., உங்களுக்கு தோணாமலா........ இருக்கும்ம்ம்.......!
*********************************************************************************************************************
டிவிட்டியத்தில் சில: 

பெட்ரோல் விலை ரூ.1.20 குறைப்பு!- இதுதான் தெளிய வச்சு அடிக்கிறதோ?

           
கடித்த கொசுவை கையில் பிடித்து பார்த்த பிறகு மகிழ்ச்சி ஏற்படுகிறது: அது டெங்கு கொசு இல்லை என உறுதிபடுத்தபட்டதால்   

இன்வெர்ட்டர் பயன் படுத்தாதவர்களின் மின் பங்கை அபகரிக்கும் குற்ற உணர்வு மின்வெட்டு சமயத்தில் ஏற்படுகிறது!       

ஒரு தடவை பொய் பேசினாலும், மை பூசினாலும் கடைசிவரைக்கும் மெயின்டைன் பண்ணனும் # பேக்ட்

எனக்கு ஒரு விசயம் புரியவில்லை! #இரண்டுமணி நேரம் இடைவெளிவிட்டு, விட்டு, விளம்பரத்தை காட்டி அதற்க்கு ஏன் நீயா நானா என்று பெயர் வைத்தார்கள்?

தமிழ் நாட்டில் பெரும்பாலானவர்கள், பெரும்பாலானவர்களுக்கு செய்யும் உதவி "சார் சைடு ஸ்டாண்ட்"

இரண்டாவது உதவி "லைட் எரியுது!"   

படித்து ரசித்த டிவிட்:

  குழந்தையாய் இருக்கும்பொழுது கோடிக்கணக்கில் இருக்கும் உலகஅதிசயங்கள் வளர்ந்தவுடன் வெறும் ஏழாகி விடுகின்றன

*********************************************************************************************************************

       ராம் படத்திற்காக யுவன் சங்கர் ராஜ இசையில், ஜேசுதாஸ் தன்  இனிமையான குரலில் வசீகரித்த பாடல்,   சூப்பர் சிங்கரில் சந்தோசின் குரலில் மேலும் ஒரு ஈர்ப்பை ஏற்ப்படுத்தியது.   அனுபவித்து பாடுவது என்பது இதுதான்!



*****************************************************************************************************************

கொஞ்சம் தாமதமாகிவிட்டது! 

ஜேர்மன் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் 49 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டனில் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. ஜேர்மனியின் பான் நகருக்கு அருகே உள்ள பேட் காடஸ்பெர்க்கிலிருந்து கடந்த 1963ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் திகதி கடிதமொன்று, பிரிட்டனில் உள்ள பேனா நண்பருக்கு அனுப்பப்பட்டது. இந்த கடிதம் 49 ஆண்டுகளுக்கு பின், கடந்த மாதம் 29ஆம் திகதி பிரிட்டனின் பெர்க்ஷயர் பகுதியில் உள்ள டெரிக் லெவிசுக்க கிடைத்துள்ளது. 

இதுகுறித்து லெவிஸ் கூறுகையில், ஜேர்மனியில் உள்ள கட்ரன் ரென்ட்ராப் என்ற பெண்ணும், நானும் 17 வயதிலிருந்து பேனா நண்பர்களாக இருந்தோம். அவளது தந்தையின் பிரிட்டன் வருகை குறித்து எனக்கு எழுதிய கடிதம் தான், இப்போது என் கையில் கிடைத்துள்ளது. அந்த காலத்தில் அஞ்சல் குறியீட்டு எண் நடைமுறையில் இல்லை. இது கடிதம் தாமதமாக கிடைத்ததற்கு ஒரு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த தபால் 49 ஆண்டுகள் தாமதமாக வினியோகிக்கப்பட்டதற்கு நாங்கள் காரணமில்லை என ராயல் மெயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
                                  தாமதமானாலும் சரியான முகவரிக்கு கொடுத்தமா!?இல்லையா? அத பாருங்க!
**********************************************************
    மும்பை கடையடைப்பை பற்றி கருத்து சொன்ன பெண்ணையும், அதற்க்கு லைக் போட்ட பெண்ணையும் மும்பை காவல் துறை கைது செய்திருக்கிறார்கள்!   கருத்து பரிமாற்றம் என்பது ஒரு ஆக்கபூர்வமான ஒரு விவாதம் தான்.  கலைஞரும், பவர் ஸ்டாரும் நினைத்தால் முக்கால்வாசி FACEBOOK தமிழர்கள் மீது புகார் கொடுக்கலாம்.    அந்த பெண்ணின் கருத்து சரியல்ல எனில் அதில் பதிலளிக்க வாய்ப்புள்ளது.  அதை விடுத்து, புகார் செய்தார்கள் என்பதற்காக கைது என்பது,  என்ன ஒரு  .......!

                        அய்யோ .......இந்த மாதிரி நான் கருத்து சொல்லலாமா......?  
இது சம்பந்தமாக  தற்போதைய செய்தி:

Nov 18, 2012

தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்!




தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறத
ு. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு.



இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன் று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.



தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல் பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.



இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது.

Nov 3, 2012

புலி வருது!


முன்பு ஒருமுறை இந்த கதையை படித்திருந்தாலும், இந்த கதை சொல்லும் நீதி எவ்வளவு உண்மை என்பதை மீண்டும்  மீண்டும் ஒருமுறை படித்த பொழுது ஞாபகத்திற்க்கு வந்தது!



               காட்டுக்குள் இருந்து வழி தவறி வந்த அந்தப் புலி, எப்படியோ அந்த பன்னாட்டு நிறுவனத்தின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது. ஆளரவத்தில் அரண்டு மிரண்டுபோன புலி, அந்த டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது. மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது.

                    நாலாவது நாள்...

            பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூமுக்குள் தனியாக வந்த ஓர் ஆளை அடித்துச் சாப்பிட்டது.  அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர். அவர் 'மிஸ்’ ஆனதைப்பற்றிஅலுவலகத் தில் யாருக்கும் கவலை இல்லாததால்,  எந்த அதிர்வு நிகழ்வும் இல்லை பயப்படும் படி எதுவும் நிகழவில்லை என்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச் சாப்பிட்டது புலி.


                   அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். யாரும் அவரைத் தேடவும் இல்லை, காணவில்லையே என்று பதறவும் இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம்!)

அடுத்த நாள், நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட்டை ஏப்பம்விட்டார் புலியார்.

நிறுவனத்தில் குண்டூசி விழுந்த சலனம்கூட இல்லை.

இதனால் குளிர்விட்டுப்போன புலி, நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து செட்டில் ஆனது.

அடுத்த நாள் பசிக்கவே இல்லாவிட்டாலும், சும்மா இருக்கட்டுமே என்று ஒரு நபரை அடித்து மூர்ச்சையாக்கி,தனக்குப் பக்கத்தில் இருத்திக்கொண்டது.

காபி கோப்பைகளைக் கழுவ வந்த அந்த நபர்தான் அலுவலகத்தின் பியூன். காபி வாங்கச் சென்ற பியூனைக் காணவில்லை என்று மொத்த அலுவலகமும் திமிலோகப்பட்டு, தேடுதல் வேட்டையைத் துவங்கியது. 

அடுத்த பத்தாவது நிமிடத்தில், ரெஸ்ட் ரூமில் மூர்ச்சையாகிக்கிடந்த பியூனையும், தொடர்ந்து புலியையும்கண்டுபிடித்துவிட்டார்கள். 

புலியை அடித்துத் துவைத்து, கூண்டுக்குள் அடைத்து ஜூவுக்கு அனுப்பிவைத்தார்கள்!

நீதி:

     உங்களுக்கான நட்பு அல்லது மரியாதையை நிர்ணயிப்பது உங்கள் பதவியோ,செல்வமோ கிடையாது.

நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது!