Jul 30, 2011

நொறுக்குத்தீனி!

                 “எப்படி இருந்த இருந்த மதுரை  மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் இப்படி ஆயிடுச்சே  என்று மதுரை வந்து செல்லும் பயணிகள் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கையில், கலெக்டர் சகாயம் களத்தில் இறங்கி மாட்டுத்தாவணியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டிருக்கிறார்.  அடைசலான கடைகளை இல்லாமல், இப்போது ஒரு நேர்த்தி தெரிகிறது, மக்கள் நடந்துசெல்லும் பாதையில் இருந்த முறுக்கு கடை, டீ கடை, பழக்கடை என்று சகலமும் அகற்றப்பட்டுள்ளது நல்ல விசயம்.  நியாயமான கழிவறை கட்டணம் வாங்குகிறார்கள் இன்று வரை.  எத்தனை நாட்களுக்கு தொடரும் என்பது அல்லக்கைகளை அடக்கி வைக்கும் ஆட்சியாளர்களின் கைகளில்!
_____________________________________________________________________________   
                    
                          சமீபத்தில் எனக்கும் என்  நண்பர்கள் வட்டாரத்திற்கும் ஒரு மெயில் பார்வர்ட் ஆகி வந்தது.  அதில்  ஒரு வயதான மூதாட்டியின் படத்தை போட்டும், இந்த மெயிலை ஒரு பத்து பேருக்கு பார்வர்ட் செய்ய வேண்டும், இல்லையேல் அவர்களுக்கு அது நடக்கும், இது நடக்கும் என்று ஒரு பீதியை கிளப்பி  அந்த மெயில் இருந்தது.   அப்படி பார்வர்ட் செய்தால் அவர்களுக்கு நல்லது நடக்குமாம்.   அந்த மெயிலை எனக்கு பார்வர்ட் செய்தவர்களுக்கு நடந்த நல்லவிசயம் என்னவென்று எனக்கு தெரியாது.  ஆனால் அந்த மெயிலை பார்வர்ட் செய்யாத எனக்கு கெட்டவை எதுவும் இன்றுவரை நடக்கவில்லை என்பது உண்மை.      பலவருடங்களுக்கு முன்பு பிட் நோட்டீஸ் அடித்து வெங்கடாசலபதி பெயரை சொல்லி இப்படி வரும், இப்போது நாவீனமாகி விட்டதால் இமெயிலில் அந்த மூடநம்பிக்கை விதைக்கப்படுகிறது.  அதுவும் வடக்கே இருந்து. 
        எனக்கு இன்னொரு  சந்தேகம். யாரோ ஒரு விவகாரம் பிடிச்ச ஆள், நம் இந்தியாவில் எத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள்? என்று கணக்கெடுக்கிறார்களோ! என்னவோ! ( பார்வர்ட் செய்த நண்பர்கள் கோபப்படக்கூடாது ).
 யாராவது அந்த மெயிலை பார்க்க வேண்டும் என்றால் email ID கொடுங்கள் தவறாமல் அனுப்பிவைக்கிறேன்!
_____________________________________________________________________________

Jul 25, 2011

செய்திகள் வாசிப்பது.....!

                             தமிழில் எந்த டிவி சேனலை வைத்தாலும், சினிமா, பாட்டு, நடனம், மெகா தொடர் நாடகங்கள் என்று இருப்பதால் இதையெல்லாம் தவிர்த்து ஓரளவு நம்ம பொது அறிவை வளர்த்துக்குவோம் என்று செய்தி சேனலை வைத்தால், அந்த செய்திகளில் ஒரு நடுநிலை இல்லை!.

                              தமிழில் ஒரு நடுநிலையான செய்தி சேனல் இல்லாதது ஒரு நீண்ட நாள் குறையே!. பெரும்பாலான நடுநிலையாளர்களின் ஏக்கமும் கூட!. சன் டிவி, கலைஞர் டிவியை வைத்தால் தி.மு.க. சம்மந்தப்பட்ட செய்திகளே வருகிறது!. Spectrum, அதை தொடர்ந்த கைது நடவடிக்கைகள் குறித்த செய்திகள் வருவதில்லை. நாட்டில் ஒண்ணுமே நடக்காதது போல் செய்தி போடுகிறார்கள்!. ராசா, கனிமொழி கைது, தயாநிதி பதவி விலகல் நிகழ்வுகள் இவர்களுக்கு தெரியாது போலும்!, அந்த நேரத்தில் ஏதாவது சம்பந்தமில்லாத செய்திகளை போடுகிறார்கள்.

                             இவர்கள் இப்படி என்றால், ஜெயா டிவி-க்கு சமச்சீர் கல்வி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு ஒரு செய்தியே இல்லை!. அதை விடுத்து தி.மு.க கட்சியினர் கைது பற்றி நான்காவது முறையாக செய்தி சொல்லிக்கொண்டு இருப்பார்கள்!

Jul 24, 2011

ஆப்பிள் சாப்பிட்ரிங்களா? -குறும்படம்


ராம்கோபால் வர்மாவின் "KAUN" படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம். பயந்த சுபாவம் கொண்டவர்கள் இந்த குறும்படத்தை பார்க்க வேண்டாம்.
நான் பயப்படவில்லை என்று சத்தியம் செய்ய முடியாது.  5.1 ஒலி பின்னணியில் பார்த்த பொழுது கொஞ்சம் தூக்கிவாரிப்போட்டது உண்மை!
இந்த குறும்பட டீம் ஒரு நல்ல திகில் படத்தை படைக்க தகுதி வாய்ந்தவர்கள். வாழ்த்துக்கள்!

உண்மைய சொல்லனும்னா....!

                  குறும்படம் எடுக்கிறது  சுலபம் இல்லை.  Future படம் எடுக்குறதுல இருக்கிற சிரமங்கள் இதிலும் இருக்கு.  இந்த படத்தை பாருங்க, ஒரு இயக்குனரின் கஷ்டங்கள் ரொம்ப காமடியா இருக்கும்.