Apr 24, 2011

குரங்கு பிடிக்கும் பொழப்பு!

                    நான் கல்லூரி படித்து முடித்ததும்,  சிலரைப்போல்  அதாவது காதல் படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் சொல்லுவாரே “ வில்லனாகி, ஹீரோவாகி, அப்படியே நேரடியா சி.எம். ஆகவேண்டும் என்று அல்லது ஒரு பாடல் முடிவதற்குள் டாட்டா,  பிர்லா ரேஞ்சுக்கு எங்கேயோ போவாங்களே!, அதுமாதிரி இல்லாவிட்டாலும் கொஞ்சம் கனவுகளை சுமந்துகொண்டு நானும் சென்னையில் ஒரு காலைப்பொழுதில் காலடி எடுத்துவைத்தேன். அங்கே எனக்கு பல அனுபவங்கள் கிடைத்தாலும் பிறகொரு சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி விரிவாக பதிவிடுகிறேன். இப்போது நான் சொல்ல வந்தது, எனது பங்கு சந்தை அனுபவத்தை பற்றி.  நான் அங்கு பங்குச்சந்தை இடைத்தரகர் ஒருவரின் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தேன்.             
           துவக்கத்தில் தாராளமானது வைத்து சம்பளம் ரூபாய் 1000 கொடுத்தார்கள்.  அந்த நிறுவனத்தில் மேனேஜர் வேலை என்று சொன்னார்கள். பிறகுதான் தெரிந்தது அலுவலகத்தை கூட்டிப்பெருக்கும் வேலைக்கார அம்மாவை தவிர்த்து நான்மட்டும்தான் சம்பளக்காரன். எனக்கு அப்போது சம்பளம் பெரிதாக தெரியவில்லை.  காரணம் பங்குசந்தையை ஒரு கை பார்க்கவேன்டும் என்ற எண்ணம் இருந்ததால்.   அந்த கால கட்டத்தில் பங்குச்சந்தை கணினிமயமாக்கப்படவில்லை. ஆன்லைன் விற்பனை, டிமேட் கணக்கு கிடையாது. 
           பங்குசந்தையில் கத்திரிக்காய் கணக்காக கூவி கூவி ஷேர் விற்பார்கள். அதையும் அப்போதைய தூர்தர்சனில்தான் பார்த்திருக்கிறேன். மாலை மூன்று மணிக்கு மேல்தான் பங்குகள் என்ன விலைக்கு போயின என்று தெரியவரும்.
           ஆனால் சென்னையில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் கூட பங்குகளை வாங்கி விற்று நம்பிக்கை இழக்காமல் முடிந்தால் கையில் காசு பார்த்துக்கொண்டிருப்பார்கள். எல்லோரும் பங்குசந்தையில் பங்குகள் வாங்கி விற்று லட்ச லட்சமாக சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்!.
           எனக்கு அந்த (துர்)பாக்கியம் அந்த நிறுவனத்திலிருந்து விலகும்வரை கிட்டவில்லை.  காரணம் எனக்கு சம்பளம் 1000-லிருந்து  2000-வரை உயர்தப்பட்டலும்  சென்னையை பொருத்தவரை கையில் வாங்கும் சம்பளம் திருவல்லிக்கேணி மேன்சன் வாடகைக்கும், சாப்பாட்டிற்கும், மாதம் இருமுறை தேவி காம்ப்ளக்சில்  பார்க்கும் சினிமாவிற்கும்  போதவில்லை.  மாத கடைசியில் ஊரிலிருந்து மணியார்டர் வந்தால்தான் மெஸ் சாப்பாடு கிடைக்கும். 

Apr 20, 2011

தங்கராசு!

சிறுகதை - சேர்முகபாண்டியன்
                                 தங்கராசை நீண்ட வருடங்களுக்குப்பிறகு எங்க ஊரில் பார்த்தேன். ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த நான், அந்த வேலையை முடித்துவிட்டு மாலை மதுரை செல்லும் பேருந்திற்காக காத்திருந்த பொழுது  தங்கராசை எதேச்சையாக பார்த்தேன். அடையாளம் கண்டுகொண்டு அதே தயக்கத்துடன் அருகில் வந்தான்.
“எப்படி இருக்க தங்கராசு? என்றேன்.
அவன் சொன்ன பதிலை கேட்டவுடன் முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை!  அவன் வார்த்தையிலும் முகம் காட்டிய உணர்ச்சிகளிலும் கோபம இல்லை.  ஆனால் ஒரு ஆதங்கமும், ஏமாற்றமும் தெரிந்தது.  எதற்க்காக அப்படி சொன்னான்?. என்று எனக்கு யோசிக்க நேரம் தேவைப்பட்டது.
“என்ன தங்கராசு சொல்ற
“ஆமாம் நீங்க எழுதிக்கொடுத்த ஒரு கடிதத்திலேயே என் வாழ்க்கை, இதோ இந்த சட்டையை போல் ஆகிவிட்டது. இப்போது முகத்தில் செயற்கையான ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு அழுந்தச் சொன்னான்.

Apr 18, 2011

மதுரை முதல் மத்தி வரை-மூன்று ரியல் ஹீரோக்கள்!

கடந்த வாரங்களில் மதுரையிலிருந்து டெல்லி வரை இந்திய மக்களை சிந்திக்க வைத்து, நேர்மைனா என்ன? (ஊழல்) கரை நல்லது! என்று நினைத்துக்கொண்டிருந்த பலரை தூக்கமிலக்கச் செய்து, மக்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்ப்படுத்திய,  கீழ்க்கண்ட இந்த மூவருக்கும் ஊருலகதின் வாழ்த்துக்கள்! தொடரட்டும் இவர்கள் பணி!


ஒரு மாவட்ட ஆட்சியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார்! பல்வேறு துறைகளுக்கு தூக்கியடிக்கப்பட்டலும்,  ஊழல் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தியவர்!

மதுரை -மாவட்ட ஆட்சியர் திரு சகாயம்






ஊரை கூட்டி அலப்பறை பண்ணி, படிக்கும் மாணவர்களையும்,  நோயாளிகளையும் மக்களையும் நோகடித்து நடக்கும் தேர்தலை தவிர்த்து உண்மையான அமைதிப்பூங்காவாக தேர்தல் நேரத்தில் தமிழகத்தை மாற்றிக்காட்டிய 

மாநில தேர்தல் ஆணையர் திரு பிரவீன்குமார்.


அரசியல், பதவிகள் என்னும் முகமூடிகளை போட்டுக்கொண்டு,  எதை சுருட்டலாம் என்று யோசித்து காலம் காலமாக ஊழலையும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக செய்துவந்தவர்களை கண்டு மக்கள் கையாலாகாமல் வெறுத்துப்போய். இவர்களை ஒழிக்க ஒரு இந்தியன் வரமாட்டானா என்று  ஏங்கி இருந்த நேரத்தில் முடக்கப்பட்டு கிடந்த லோக்பால் மசோதாவை நிறைவேற்ற குரல் கொடுத்து உண்ணாவிரதம் இருந்து, அதன் மூலம் மக்களிடையே ஒரு அமைதியான புரட்சித்தீயை பரவச் செய்த

காந்தியவாதி அன்னா ஹசாரே